Wednesday, 10 September 2014

பொது இடங்களில் புகை பிடித்தால் அபராதம் ரூ.20 ஆயிரமாக உயரும்?

பொது இடங்களில் புகை பிடித்தால் அபராதம் ரூ.20 ஆயிரமாக உயரும்?




புதுடெல்லி,

பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு தடை விதிக்கப்பட்டது. அப்படி புகை பிடிப்போருக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், புகை பிடிப்பதை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு கமிட்டியை அமைத்தது. அக்கமிட்டி, மத்திய அரசிடம் தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.அதில், பொது இடங்களில் புகை பிடிப்போருக்கான அபராத தொகையை ரூ.200-ல் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று சிபாரிசு செய்துள்ளது.

மேலும், புகை பிடிப்பதை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், உதிரியாக பீடி, சிகரெட் விற்பதற்கு தடை விதிப்பது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

No comments:

Post a Comment